Thursday, February 13, 2025

தெரிவு செய்யப்பட்ட பட்டப்படிப்புகளுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் - 2025

English | தமிழ்

இலங்கையின் அரச பல்கலைக்கழக முறைமையானது க.பொ.த (உ/த) பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக தகைமை பெற்ற மாணவர்களில் 25% மாணவர்களுக்கு மாத்திரமே சேவையாற்ற முடியும். அரச பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்க முடியாத பெரும்பான்மையான மாணவர்கள் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த உள்நாட்டு நிறுவனங்கள் அல்லது அரச சார்பற்ற உள்ளூர் பட்டம் வழங்கும் நிறுவனங்களை வாங்க முடியாது. இந்த பற்றாக்குறையை நிரப்பும் முகமாக அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்குடன் 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் வழிகாட்டுதலின் பிரகாரம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் (IFSLS) நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன்படி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிக சந்தை கேள்வி மற்றும் தொழில்சார் பெறுமதியுடனான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு அரசாங்கம் வட்டியில்லா கடனை வழங்குகிறது. மேலதிக செலவினங்களை ஈடுசெய்வதற்காக மாணவர்கள் தமது விருப்பத்தின் பேரில் ரூபா 300,000/- க்கு உட்பட்ட வட்டியற்ற கடனொன்றையும் பெற்றுக்கொள்ள முடியும். முழு கடன் காலமான பன்னிரண்டு (12) ஆண்டுகளில் மாணவர்கள் சார்பாக வட்டியை அரசாங்கம் ஏற்கும். அசல் கடன் தொகையை மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த ஏழு (7) அல்லது எட்டு (8) ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் மீள்கொடுப்பனவை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு ஒரு (1) வருட சலுகை காலம் வழங்கப்படுகிறது. IFSLS ஆன்லைன் அமைப்பு மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

2021,2022, 2023 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

மாணவர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு இந்த கையேட்டை முழுமையாக படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online application available since 2025.01.22

Deadline: 2025.02.22

To Watch the video

Download the Student Hand Book

Apply for Loan Scheme

Wednesday, February 12, 2025

பயனுள்ள கற்பித்தல் முறைகள் - Effective Teaching Methods

 

 English | தமிழ்

கற்பித்தல் முறை என்பது மாணவர்களுக்கு தகவல்களை வழங்கும் முறையாகும். அதாவது வகுப்பறையில், நிகழ்நிலையில் அல்லது வேறு சில ஊடகங்களில் கற்பிக்கும் போது, கற்றல் தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கப் பயன்படுத்தப்படும் முறைகளைக் குறிக்கும்.

கற்றல் பாங்குகள் - Learning Styles

 

  English | தமிழ்

கற்றல் பாங்கு (Learning Styles) என்பது கற்றல் சூழ்நிலைகளில் தகவல்களைப் பெறுவதற்கும் செயலாக்குவதற்கும் ஒரு தனிநபரின் இயல்பான அல்லது பழக்கமான வடிவமாகும். அதாவது ஒருவர் ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்ளும் விதம்/ முறை கற்றல் பாங்கு எனலாம்.

Flipped Classroom என்றால் என்ன?

 

English | தமிழ்

Flipped Classroom என்பது மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை அல்லது புரட்டப்பட்ட வகுப்பறை எனவும் கூறப்படும். இது ஒரு மாற்றுக் கற்பித்தல் உத்தியாகும். நவீன கற்பித்தல் உத்திகளில் பிரபலமானதும் பயன்மிக்கதுமான கற்பித்தல் முறையாகும்.

தொழிற் கல்வி நிலையங்கள்

 

English | தமிழ்

மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் இயங்குகின்ற நிறவனங்கள், கற்கை நெறிகளுக்கான தேசிய தொழிற் தகைமைச் சான்றிதழ்களை (NVQ Level Certificates) வழங்குகின்றன.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள்

 

English தமிழ்

பாடசாலைக் கல்வியன் பின்னர் மாணவர்கள் உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியினை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெற்றுக் கொள்வதன் மூலமே செல்லுபடியான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் தொழில் ஒன்றைப் பெறுவதற்கும் அச்சான்றிதழ்களைப் பயன்படுத்தக் கூடியதாக அமையும்.

அவ்வாறு அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பெறப்படும் சான்றிதல்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் போது வலிதற்றதென நிராகரிக்கப்படுவதும் உண்டு. எனவே பாடசாலைக் கல்வியின் பின்னர் உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியினைப் பெற விரும்பும் மாணவர்களுக்கு இப்பதிவு நன்மை பயக்கும்.

உயர் கல்வி பெறக்கூடிய நிறுவனங்க​ளை பின்வரும் தொகுதிகளுக்குள் உள்ளடங்குகின்றன.

(கீழுள்ள ஒவ்வொன்றையும் Click செய்வதன் மூலம் விரிவாகப் பார்வையிட முடியும்)

க.பொ.த உயர் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான தகைமைகள் (Including Pending)

  

க.பொ.த உயர்தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் நியமங்களின் அடிப்படையில் பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

க.பொ.த. உயர் தரத்தில் கற்பதற்கான ஆகக் குறைந்த தகைமைகள்

 

 English | தமிழ்

க.பொ.த (உ/த) பாடப் பிரிவுகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் வேறுபட்ட தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். க.பொ.த. உயர் தரத்தில் பின்வரும் 07 பாடப்பிரிவுகள் காணப்படுகின்றன.

பாடசாலைகளில் பணியாற்ற வேண்டிய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடவேளைகளின் எண்ணிக்கை.

  

கல்வி அமைச்சின் 06/2021 இற்கு அமைவாக 2021.05.01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாடசாலைகளில் பாடரீதியாக பணியாற்றவேண்டிய ஆசிரியர், அதிபர்களின் எண்ணிக்கை, கற்பித்தலில் ஈடுபட வேண்டிய பாடவேளைகளின் எண்ணிக்கை  மற்றும் கற்பித்தல் நேரங்களின் அளவுகள் கீழ்வரும் அட்டவணையில் உள்ளவாறு அமைதல் வேண்டும்.

அரச ஊழியர்கக்கான சம்பளத்துடனான கற்கை விடுமுறை பெறுதல் | சுற்றறிக்கை 26/2013

 

English | தமிழ்

இலங்கையின் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட வேறு மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களின் உள்நாட்டுப் பாட நெறிகளைத் முழு நேரம் அல்லது பகுதி நேரம் தொடர்வதற்காக கற்கை விடுமுறை வழங்குதல் தொடர்பாக 26/2013 ஆம் இலக்க சுற்றறிக்கை தௌிவுபடுத்துகின்றது.

Tuesday, February 11, 2025

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ள அரசாங்க அலுவலர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு

English | தமிழ்

அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இல. 28/98 இன் பிரகாரம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்ற அரச அலுவலர்கள் ஊக்குவிப்பு கொடுப்பனவு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும்.

Popular Posts